யார் சிறந்தவர்???
படைக்கும் பிரம்மனா அழிக்கும் சிவனா காக்கும் விஷ்ணுவா?
என்ன சொல்கிறது நம் சனாதன தர்மம்???
நாம் பல்வேறு தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம், ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபடுகிறோம். இதைபோன்ற உருவ வழிபாடுகளை நம் இந்து தர்மம் அனுமதிக்கிறதா???
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது நம் தர்மத்தின் கோட்பாடாகும். அந்த ஒரே தேவன் யார் என்பதே நம் குழப்பமாகும்.
இறைவன் ஒருவன் தான் அவன் காலத்திற்கும் படைப்பிற்கும் தக்கபடி ஒவ்வொரு வடிவில் அவதாரமெடுக்கிறான்.
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்(சிவன்), சக்தி,லட்சுமி, முருகன் என அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே.
துறவிகள், ஞானிகள், சித்தர்கள் போன்றோர் தியானத்தாலும் தவ வலிமையாலும் ஞானமார்க்கத்தின் மூலம் இறைவனை கண்டு இறையோடு கலந்தார்கள்.
பற்று, பந்தம், பாசம் என லௌகீக வாழ்க்கை வாழக்கூடிய மனிதனால் இறைவனை ஞான மார்க்கத்தால் உணர்வது கடினமானது.
அதன் காரணத்தால் நமது முன்னோர்களும் சித்தர்களும் ஞானிகளும் மனிதனுக்கு காட்டிய பாதையே உருவ வழிபாடாகிய பக்தி மார்க்கமாகும்.
பக்தி மார்க்கத்தால் தன் குடும்ப பந்தமும் அறுபடாமல் கடமைகளையும் துறக்காமல் ஒருவனால் இறைவனை அடைய முடியும் என்பது சாத்தியமே.
இதற்காக நம் முன்னோர்கள் வகுத்தவையே சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் ஆகும்.
நாம் ஒரு உருவத்தை தெய்வமாக நினைத்து வழிபட ஆரம்பித்து விட்டால் அந்த உருவமாக இறைவன் காட்சி தருகிறான்.
இதை தான் பகவான் கீதையிலும் உபதேசிக்கிறான்.
கீதை-அத்-7:சுலோ-21
எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.
இந்த ஒரே ஒரு சுலோகத்தின் மூலம் அனைத்தும் பரம்பொருளின் வடிவமே என்பது தெளிவாகும்.
பிரம்மனோ விஷ்ணுவோ ஈசனோ அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே
சர்வம் சிவமயம்


No comments:
Post a Comment