Wednesday, 13 December 2017

சனாதன தர்மம் என்றால் என்ன அதன் அர்த்தம் என்ன?

நிலையான தர்மம்/தத்துவஞானம் என்பதே சனாதன தர்மம் என்பதன் அர்த்தமாகும்.

சனாதன தர்மம் மனித வாழ்க்கைக்கான நிலையான தர்மத்தை தரக்கூடியது. நமது புராணங்களும் வேதங்களும் மனித வாழ்க்கைக்கு தேவையான ஒழுத்தையும் வாழ்வின் இன்ப துன்பங்களையும் கற்பிக்கின்றன.

மதங்களை காட்டிலும் சனாதன தர்மம் எந்த வகையில் சிறந்தது?

மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது.
சனாதன தர்மம் ஆக்கமும் அழிவுமற்ற நிலையான தர்மமாய் உயர்ந்து நிற்கிறது.

மற்ற மதங்கள் கடவுளை பயமுறுத்தும் பொருளாக காட்டுகின்றது. கடவுளை கண்டு அஞ்ச வேண்டும் கட்டாயம் இறைவனுக்கு அஞ்சி அவனை தொழ வேண்டும் இறைவனை தொழாதவர் நரகத்தில் தள்ளப்படுவார் என மனிதனை தன் இயல்பில் செயல்பட விடாமல் பயமுறுத்தி ஒரு கட்டாய சட்டத்தினை பின்பற்ற வைக்கின்றன.

சனாதன தர்மம் இறைவனை குழந்தையாக பாவிக்கிறது இறைவனின் முன்பு மனம் விட்டு பேசும் உரிமையை தருகிறது.

கண்ணன், பிள்ளையார், முருகன் போன்ற குழந்தை பருவ இறைவனின் கதைகள் மூலம் இறைவனை ரசிக்கும் பொருளாய் காணமுடியும்.

ஸ்ரீராம அவதாரத்தின் படி இறைவனே ஆயினும் மனித வடிவம் எடுத்தால் மனிதனுக்கான கர்ம வினைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது.

ராமாயணம் ஸ்ரீராமரின் உயர்ந்த பண்பையும், சீதையின் கற்பு நெறியையும், லட்சுமணன்,பரதன் ஆகியோரது சகோதர பாசத்தையும், ஹனுமனது பக்தியையும் பறை சாற்றுகிறது.

மஹாபாரதம் மனித வாழ்வின் இன்ப துன்பங்களையும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் யுத்தத்தில் தர்மத்தின் வெற்றியையும் எடுத்துரைக்கின்றது.
யுத்த களத்தில் கலங்கி நிற்கும் அர்ஜூனனுக்கு கண்ணன் உரைத்த கீதை மனித வாழ்வின் மாபெரும் பொக்கிஷம். மனிதன் ஒவ்வொரு முறையும் வாழ்வில் தடுமாறி நிற்கும்போது கீதையின் வரிகளை உணர்ந்து படித்தால் வாழ்க்கையின் அடுத்தகட்ட செயல்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

மேலும் நன்மை செய்தால் சொர்கம் பாவம் செய்தால் நரகம் என்று தான் சொல்கிறதே தவிர மதங்களைப்போல் இறைவனை வணங்காவிட்டால் நரகம் என ஒருபோதும் சொல்லவில்லை.

மதங்கள் இறைவனை வணங்கும் முறைகளைத்தான் கூறுகின்றன.
ஆனால் சனாதன தர்மம் அஹம் ப்ரம்மாஸ்மி என தன்னையே கடவுளாக நினைத்து இறைநிலை அடையக்கூடிய அத்தனை வழிகளையும் மனித குலத்திற்கு தருகிறது.

உலகிலுள்ள அனைத்து மதங்களை எடுத்துக்கொண்டாலும்
*சனாதன தர்மம் ஒன்றே மனித வாழ்க்கைக்கான சிறந்த தர்மம்* என்பதை உலகம் உணர்ந்து ஏற்கும் காலம் வெகு விரைவில் வரும்.


சர்வம் சிவமயம்
ஓம் நமசிவய

சனாதன தர்மம் என்பது மதமா???

மதம்
முதலில் மதம் என்பது என்ன?
இது தான் வழிபாட்டு முறை இதைத்தான் வழிபட வேண்டும் இது மட்டுமே கடவுள் என்ற கொள்கை/கோட்பாட்டினை மனிதன் உருவாக்கி பின்பற்றுவதே மதம் ஆகும். அதாவது வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது மதம் ஆகும்.

இஸ்லாம் கிறித்தவம் முதலியவை குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இது மட்டுமே கடவுள் என்று நிர்ணயிக்கப்பட்டு மதகுரு ஒருவர் காட்டும் வழிகாட்டுதலின்படி/ஆணைகளின்படி செயல்படுவதால் அவை இரண்டுமே மதமாகும்.

இந்து - மதமா?

இந்து மதம் என்று சொல்வதை விட *இந்து தர்மம்/ சனாதன தர்மம்* என்ற பெயரே இதற்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால் இந்து தர்மம் யாராலும் உருவாக்கப்பட்டதல்ல ஆக்கமும் அழிவும் அற்றது. நம் முன்னோர்கள் காட்டிய நல்வாழ்க்கை பாதையில் நம்மை நம்முடைய சுய சிந்தனையின் வழியில் எந்தவித கட்டுப்பாடுமின்றி செயல்பட அனுமதிக்கிறது. எந்த கட்டளைகளையும் தரவில்லை இதுதான் வழிபாட்டு முறை என்று வரையறுக்கவில்லை.

அனைத்தையும் கடவுள் என்கிறது. பஞ்சபூதங்களையும் வழிபடும் இயற்கை வழிபாட்டு முறையை தருகிறது இதனால் இதனை சனாதன தர்மம் என்று அழைப்பதே சரியானதாகும்.


சனாதன தர்மம் என்பதன் அர்த்தம் என்ன? மற்ற மதங்களை காட்டிலும் இந்து தர்மம் எந்தவிதத்தில் உயர்ந்தது???

அடுத்த பதிவில்.....

Tuesday, 12 December 2017

ஜட்கா உணவுமுறை

ஜட்கா உணவுமுறை

அழிந்துவரும் ஹிந்து கலாச்சார அசைவ உணவு முறை

பல இறைச்சி கடைகளிலும் அசைவ உணவகங்களிலும் *"ஹலால் உணவகம்,"* *"ஹலால் முறையில் செய்யப்பட்டது"* என்ற அறிவிப்பு பலகைகளை பல கடைகளில் ஹிந்துக்களின் கடைகளிலும் கூட பார்த்திருப்போம்.

ஹலால்

இஸ்லாமியர்கள் தங்கள் குர் ஆன் வழக்கப்படி ஓர் உயிரை(ஆடு,கோழி) ஒரே வெட்டில் வெட்டி கொல்லாமல், கழுத்து பகுதியின் நரம்பை மட்டும் அறுத்து அந்த உயிரை துடிக்கவிட்டு கொல்வதே ஹலால் ஆகும்.




இத்தகைய கொடூரர்கள் ஆடு, மாடு, கோழிகளை மட்டுமல்ல இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் மூலம் தனக்கு கிடைக்கும் அடிமை மனிதர்களையும் இப்படிதான் கழுத்தை பாதி அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்கிறார்கள்.



ஹலால் முறை சரியானதா?

இந்திய மக்கள்தொகையில் 14% இஸ்லாமியர்களுக்காக அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக *80% ஹிந்துக்களையும்* இஸ்லாமிய முறைப்படி உணவை ஏற்றுக்கொள்ள வைப்பது எப்படி நியாயமாகும்?

அது மட்டுமல்ல. ஹலால் முறையில் அறுக்கப்படும் உயிர்கள் கழுத்தை முழுவதும் வெட்டாமல் விடுவதால் ரத்தம் முழுதும் உடனடியாக வெளியேறாமல் இருப்பதால் அதில் கிருமிகள் தாக்கம் ஏற்படலாம். இதனால் பல நோய்கள் உண்டாகின்றன.
மேலும் ஓர் உயிர் தன் மரணத்தில் அதிகப்படியான வேதையை அனுபவித்து சாகிறது.


ஜட்கா

ஜட்கா உணவுமுறை என்பது ஆடு கோழி போன்றவற்றை வெட்டும்போது ஒரே வெட்டில் தலை தனியாக உடல் தனியாக துண்டாக்குதல் ஆகும்

நமது கோவில்களில் கூட பலி கொடுக்கும் போது இப்படி தான் ஒரே வெட்டில் தலையை துண்டாக்கி விடுவார்கள்.


இந்த முறையில் சாகும் உயிருக்கும் பெரிய வேதனை இருக்காது. அதே நேரம் ரத்தம் முழுதும் விரைவில் வெளியேறுவதால் அதில் கிருமிகள் தாக்குவதும் இல்லை.

நம் முன்னோர்கள் கொல்லாமையை வழியுறுத்தியுள்ளார்கள் உணவுக்காக ஓர் உயிரை கொல்லும் போதும் அந்த உயிருக்கு அதிக வேதனை தரக்கூடாது என்பதற்காக கடைபிடிக்கப்பட்டதே ஜட்கா முறை.

இனி எங்கே சென்றாலும் இறைச்சி வாங்குவதாக இருந்தாலும் அசைவ உணவகங்களில் சாப்பிடுவதாக இருந்தாலும் அது ஜட்கா முறையில் தயாரிக்கப்பட்ட அசைவமா என்பதை உறுதி செய்து பின்னர் சாப்பிடுங்கள்.

பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம் என ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம். இவற்றை மீண்டும் காத்து நிலைநாட்டுவது நமது கடமையாகும்.

படைக்கும் பிரம்மனா அழிக்கும் சிவனா காக்கும் விஷ்ணுவா?

யார் சிறந்தவர்???

படைக்கும் பிரம்மனா அழிக்கும் சிவனா காக்கும் விஷ்ணுவா?

என்ன சொல்கிறது நம் சனாதன தர்மம்???




நாம் பல்வேறு தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம், ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபடுகிறோம். இதைபோன்ற உருவ வழிபாடுகளை நம் இந்து தர்மம் அனுமதிக்கிறதா???


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது நம் தர்மத்தின் கோட்பாடாகும். அந்த ஒரே தேவன் யார் என்பதே நம் குழப்பமாகும்.

இறைவன் ஒருவன் தான் அவன் காலத்திற்கும் படைப்பிற்கும் தக்கபடி ஒவ்வொரு வடிவில் அவதாரமெடுக்கிறான்.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்(சிவன்), சக்தி,லட்சுமி, முருகன் என அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே.

துறவிகள், ஞானிகள், சித்தர்கள் போன்றோர் தியானத்தாலும் தவ வலிமையாலும் ஞானமார்க்கத்தின் மூலம் இறைவனை கண்டு இறையோடு கலந்தார்கள்.

பற்று, பந்தம், பாசம் என லௌகீக வாழ்க்கை வாழக்கூடிய மனிதனால் இறைவனை ஞான மார்க்கத்தால் உணர்வது கடினமானது.

அதன் காரணத்தால் நமது முன்னோர்களும் சித்தர்களும் ஞானிகளும் மனிதனுக்கு காட்டிய பாதையே உருவ வழிபாடாகிய பக்தி மார்க்கமாகும்.

பக்தி மார்க்கத்தால் தன் குடும்ப பந்தமும் அறுபடாமல் கடமைகளையும் துறக்காமல் ஒருவனால் இறைவனை அடைய முடியும் என்பது சாத்தியமே.

இதற்காக நம் முன்னோர்கள் வகுத்தவையே சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் ஆகும்.

நாம் ஒரு உருவத்தை தெய்வமாக நினைத்து வழிபட ஆரம்பித்து விட்டால் அந்த உருவமாக இறைவன் காட்சி தருகிறான்.

இதை தான் பகவான் கீதையிலும் உபதேசிக்கிறான்.

கீதை-அத்-7:சுலோ-21

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.

இந்த ஒரே ஒரு சுலோகத்தின் மூலம் அனைத்தும் பரம்பொருளின் வடிவமே என்பது தெளிவாகும்.

பிரம்மனோ விஷ்ணுவோ ஈசனோ அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே


சர்வம் சிவமயம்